வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டால், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட மறுக்கும் மக்களின் அலட்சிய போக்கு தான், அதிகளாவிலான தொற்று பரவுவதற்கு காரணமாகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், 4,12,262 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3,980 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகரிக்கும் தொற்று பாதிப்பு காரணமாக, ஆக்சிஜன், தடுப்பூசி, படுக்கைகள் பற்றாகுறை காணப்படுகிறது.
அஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மக்கள் தொடர்ந்து உயிரிழப்பது மிகவும் வேதனைக்குரிய செய்தியாக காணப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டால், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள், http://delhi.gov.in விண்ணப்பிக்கலாம். இங்கு விண்ணப்பிக்க புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் கொரோனா பரிசோனை செய்யப்பட்ட நேர்மறை சான்றிதழ் ஆகியவை இணைக்கப்பட வேண்டும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…