மும்பை : மறைந்த தொழிலதிபரான ரத்தன் டாடா கூறிய பொன்மொழிகள் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக இருப்பதால் அவருடைய போன் மொழிகளை விரும்பி படிப்பது உண்டு. அப்படி அவர் இதுவரை சொன்ன 10 பொன்மொழிகள் பற்றிய விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம். “சரியான முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் முடிவுகளை எடுத்து பின்னர் அவற்றைச் சரியாகச் செய்கிறேன்.” “வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் நம்மைத் தொடர மிகவும் முக்கியம், ஏனெனில் ஒரு நேர்கோட்டில், ஈசிஜியில் கூட, […]
மும்பை : மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தொழில் ரீதியாகப் பெரிய அளவில் பெயர் பெற்றதை விட, தன்னுடைய நல்ல குணத்தின் மூலமாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர். இதன் காரணமாகத் தான், அவர் இந்த மண்ணை விட்டு மறைந்த நிலையில், அவருக்காக எமோஷனலாக மக்கள் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் அவர் நேற்று காலமானார். இதனையடுத்து, ரத்தன் டாடா பற்றிய பல விஷயங்களும் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. அதனை மக்களும் […]
மும்பை : மறைந்த தொழிலதிபரான ரத்தன் டாடாவின் உடலை தற்போது பொது மக்களின் பார்வைக்காக மும்பையில் உள்ள என்.சி.பி.ஏ அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. ரத்தன் டாடாவின் மறைவு நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரத்தன் டாடாவின் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல முக்கிய தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் தனது வாழ்நாளில் பல சாதனைகள் செய்துள்ளார். மேலும், அவரது வாழ்நாளில் பல […]
மும்பை : பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு செய்தி வெளியானதுடன் பலரும் அவருடைய வாழ்க்கை விஷயங்கள் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதில் பலரும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவது என்றால் அவருடைய காதல் கதையையும், அவர் எதற்காகத் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார் என்பதைப் பற்றியும் தான். அவர் இறப்பதற்கு முன்பு உயிரோடு இருந்த சமயத்தில் கொடுத்த பழைய நேர்காணல் ஒன்றில், திருமணம் செய்து கொள்ளாதது பற்றியும், தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்கள் பற்றியும் வெளிப்படையாகவே […]
மும்பை: மூத்த தொழிலதிபர் ரத்தன் டாடா (86) உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார். டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த அவர், 2012-ல் ஒய்வு பெற்றார். பல லட்சம் இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் உலக அரங்கில் திறமையான தொழிலதிபராகவும் திகழ்ந்த ரத்தன் டாடாவின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது, ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். […]
மும்பை : டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா நேற்று இரவு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்தியாவில் பிரபல தொழிலதிபராகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் நல்ல மனிதராகவும் அறியப்படும் ரத்தன் டாடாவின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது இறுதி ஊர்வலம் இன்று மும்பையில் நடைபெற உள்ளது. அரசு முறை இறுதி சடங்கிற்கு முன்னதாக பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மும்பை NCPA மைதானத்தில் […]
மும்பை : இந்தியவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று இரவு பிரீச் கேண்டி மருத்துவமனையில் காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ரத்தன் டாட்டா மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்கள். யாரெல்லாம் இரங்கலை தெரிவித்துள்ளார்கள் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” சில மனிதர்கள் வாழ்க்கை பாடப்புத்தகங்கள், […]
மும்பை : வயது முதிர்வு காரணமாக பல்வேறு உடல் கோளாறு காரணமாக கடந்த திங்கள்கிழமை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது உடல் நிலை சரியாக இல்லை என தொடர்ந்து செய்திகள் வந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) இரவு அவர் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, அவரது உடலை கொலாபாவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு […]
டெல்லி : போராட்ட களத்திலும், ஒலிம்பிக் மல்யுத்த களத்திலும் பல்வேறு தடைகளை எதிர்கொண்டு இதற்கு மேல் போராட தெம்பில்லை எனக் கூறினாலும், மக்கள் ஆதரவுடன் மக்களுக்கான பிரதிநிதியாக தலைநிமிர்ந்து புதுத் தெம்புடன் போராடி வென்றுள்ளார் காங்கிரஸ் கட்சியின் புதிய சட்டமன்ற உறுப்பினர் வினேஷ் போகத். நடந்து முடிந்த ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி, 10 ஆண்டுகால பாஜக ஆட்சியை தகர்த்து மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால் அதனை பொய்யாக்கும் வண்ணம் பாஜக […]
டெல்லி : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 49, காங்கிரஸ் 36 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்படி, ஹரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக கட்சி. இந்நிலையில், ஹரியானாவில் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை. அது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த முடிவுகள் ஹரியானா மக்களின் விருப்பத்திற்கு எதிரான ஒன்றாகும். ஹரியானாவில் வாக்கு எண்ணும் செயல்முறை, மின்னணு வாக்குப்பதிவு […]
டெல்லி : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளுக்கும் கடந்த செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதியென 3 கட்டங்களாக நடைபெற்று முடிந்தன. காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி, பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தேர்தலை சந்தித்தன. இன்று காலை 8 முதல் வெளியான வாக்கு எண்ணிக்கை முன்னிலை […]
டெல்லி : ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசு யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது என்பதற்கான விவரத்தை ‘நோபல் அசெம்பிளி’ (Nobel Assembly) அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே, 2024-ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பை வெளியீட்டு இருந்தது. அந்த விருதானது அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருக்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக, இயற்பியலுக்கான நோபல் பரிசு […]
டெல்லி : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இதில், முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணிக்கையில் காலை முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. அதில் ஜூலானா சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளரும், ஒலிம்பிக் வீராங்கனையுமான வினேஷ் போகத் காலை முதல் முன்னிலை பெற்று வந்தார். அதன்பின், சிறுது நேரம் பின்னடைவை […]
ஹரியானா : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலேயே பாஜகவை பின்னுக்குத்தள்ளி காங்கிரஸ் முன்னிலை பெற்று வந்தது. இதில், ஹரியானா மாநிலத்தில் பாஜக – காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை கைப்பற்ற இருகட்சிகளுக்கும் இடையே […]
டெல்லி : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது முதல் தற்போது வரையில் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான் இரு மாநிலங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. ஹரியானாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் சூழல் நிலவி வருகிறது. அதே போல, ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019இல் […]
டெல்லி : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணிக்கையில் காலை முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. ஹரியான்வில் இதுவரை வெளியான முன்னிலை நிலவரப்படி, 90 தொகுதிகளில் 57 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. கடந்த 2 முறை ஆட்சியை பிடித்த பாஜக இந்த முறை […]
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகவும், ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும் அண்மையில் தேர்தல் நிறைவடைந்தத. அதனை தொடர்ந்து இன்று (அக்டோபர் 8) இரு மாநிலத்திலும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, தற்போது வரையில் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. ஹரியானாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு […]
டெல்லி : 2024-ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில் நோபல் பேரவை, அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருக்குன் ஆகியோருக்கு விருது அறிவித்திக்கிறது. மைக்ரோ RNA-ஐ கண்டுபிடித்ததற்காகவும், மரபணு ஒழுங்குமுறையில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியதற்காகவும் அவர்கள் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைக்ரோஆர்என்ஏக்களுக்கு மனித மரபணு குறியீடுகள் என்று இப்போது அறியப்படுகிறது. அவர்களின் இந்த ஆச்சரியமான கண்டுபிடிப்பு மரபணு ஒழுங்குமுறைக்கு முற்றிலும் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியது. […]
சென்னை : வடகிழக்கு பருவ மழை விரைவில் தமிழகத்தில் தொடங்க விருக்கும் நிலையில், சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுத்து அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை கொடுத்துள்ளது. அதன்படி, வரும் செப் 9-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய […]
மும்பை : டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவு காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார் என்றும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் இணையத்தில் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளில் உண்மையில்லை என்று தற்போது தனது சமூக அலுவலகத்தில் ரத்தன் டாட்டா விளக்கமளித்துள்ளார். தனது உடல் நலம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும், தான் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். அந்த அறிவிப்பில் அவர் குறிப்பிடுகையில், […]