Pakistani drone [Image Source : Twitter/@BSF_Punjab]
பஞ்சாப் எல்லையில் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை பிஎஸ்எஃப் சுட்டு வீழ்த்தியுள்ளது.
பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள சர்வதேச எல்லையில் போதைப் பொருள்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சுட்டு வீழ்த்தியுள்ளது. அதிலிருந்து போதைப்பொருள் அடங்கிய 2 பொட்டலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அமிர்தசரஸின் பிஎஸ்எஃப் கமாண்டன்ட் அஜய் குமார் மிஸ்ரா கூறுகையில், பஞ்சாப் சர்வதேச எல்லைக்கு அருகே போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை பிஎஸ்எஃப் சுட்டு வீழ்த்தியது. அதில் ஹெராயின் என சந்தேகிக்கப்படும் 2 பொட்டலங்கள் மீட்கப்பட்டுள்ளன, விழிப்புடன் இருந்த பிஎஸ்எஃப் வீரர்களால் பாகிஸ்தானின் மற்றொரு முயற்சி முறியடிக்கப்பட்டது என்று கூறினார்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை, பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள தானோ கலான் கிராமத்தில் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற மற்றொரு ஆளில்லா விமானத்தை பிஎஸ்எஃப் சுட்டு வீழ்த்தியதாகவும், அதில் மீட்கப்பட்ட போதைப்பொருளின் மொத்த எடை தோராயமாக 3.3 கிலோ என்றும் பிஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…