ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 31-ம் தேதி முதல் பான் கார்டு செல்லாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இனிமேல் கால நீட்டிப்பு இருக்காது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு வழங்கப்படும் 10 எண்களைக் கொண்ட பான் கார்டின் ஆதார் எண்ணை இணைக்க பலமுறை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனாலும் இதுவரை 30 கோடியே 75 லட்சம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். 17 கோடியே 58 லட்சம் பேர் ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை. இந்த சூழலில், தற்போது வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் அடுத்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், இதுவரை ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் சென்று இணைக்கலாம். இதற்காக ஆவணங்கள் எதுவும் தனியாக தேவையில்லை. ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண் மட்டும் இருந்ததால் போதும். இந்த இரண்டு எண்ணைகளையும் கொடுத்த பிறகு ஆதாரில் உள்ளது போலவே உங்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு கேப்சா எனப்படும் குறியீடு அல்லது ரகசிய எண்ணை (OTP) கொடுத்து ஆதார், பான் கார்டை இணைக்கலாம்.
பின்னர் இரண்டும் இணைக்கப்பட்டுவிட்டால் ஆதாரின் கடைசி 4 இலக்க எண்ணுடன் உறுதிபடுத்தப்பட்ட தகவல் வரும். மேலும் குறுஞ்செய்தி மூலமாகவும் இதனை பதிவு செய்யலாம். UIDPAN ஒரு இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்த பிறகு ஒரு இடைவெளி விட்டு பான் கார்டு எண்ணையும் பதிவு செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பினால் இரண்டும் இணைக்கப்பட்டுவிடும். குறிப்பாக பான் கார்டு செல்லாது என்றால் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியாது. மார்ச் 31க்கு பின் எப்போது ஆதார் எண்ணை இணைக்கிறோமோ, அப்போதுதான் பான் கார்டு மீண்டும் செல்லுபடியாகும்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…