இந்திய மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவைக்காக பி.எம். கேர்ஸ் நிதிக்கு 50,000 டாலர் தொகையை வழங்கியதாக ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 2.50 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை வெல்ல பெரும் ஆயுதமாக தடுப்பூசியே உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ், இந்திய மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவைக்காக பி.எம். கேர்ஸ் நிதிக்கு 50,000 டாலர் தொகையை வழங்கியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியர்கள் பலரும் கொரோனாவால் பாதிப்பட்டுள்ளது, சோகத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவைக்காக நான் பி.எம். கேர்ஸ் நிதிக்கு 50,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.37,36,077 லட்சம்) வழங்குகிறேன். மேலும், ஐபிஎல் தொடரில் விளையாடும் இதர வீரர்களும் உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…