பாட்டியாலாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சிவசேனா தலைவர் ஹரிஷ் சிங்லா கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் காளியம்மன் கோவில் அருகே இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் நிலவிய நிலையில் தொடக்கத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் சற்று நேரத்தில் கைகலப்பில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டனர். இதில் 4 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
கலவரம் தொடர்ந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பஞ்சாப் முதலமைச்சர் பகவான் தலைமையில் நடந்த உயர்நிலை கூட்டத்திற்குப் பின் பாட்டியாலாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சிவசேனா தலைவர் ஹரிஷ் சிங்லா கைது செய்யப்பட்டுள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…