ஊரடங்கு காரணமாக மின்சாரத்திற்கான மீட்டர் கணக்கீட்டை இனி மக்களே மொபைல் மூலமாக அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் மிக தீவிரமாக காணப்படுகிறது. இதன் காரணமாக ஊரடங்கு கடமையாக்கப்பட்டு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பதால் பல இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மாநில மின்சார விநியோக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று மின்சார மீட்டர் அளவை எடுக்க முடியாததால் இனி கடைக்காரர்களும் சரி, மக்களும் சரி தங்கள் வீடுகளில் உள்ள மின்சாரத்திற்கான மீட்டர் அளவுகோலை தாங்களே மொபைலில் புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது. எந்த தினத்தில் அளவு எடுக்கவேண்டுமோ அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பதாகவே பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் ஒன்று அனுப்பப்படும். இந்த எஸ்எம்எஸ் பார்க்கக்கூடிய நுகர்வோர் அந்த நான்கு நாட்களுக்குள் மீட்டர் அளவுகோலை புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டுமாம்.
அதன்பின் யார் பெயரில் மின்சார கட்டண அட்டை உள்ளதோ அவர்கள் நேரில் சென்று இந்த பணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் நேரடியாக மீட்டர் அளவு எடுப்பவர்கள் இனி வீட்டிற்கு வர மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் யார் பெயரில் மின்சார மீட்டர் அளவுகோல் புத்தகம் இருக்கிறதோ அவர்கள் நேரில் செல்ல முடியாவிட்டால் https://www.mahadiscom.in இந்த இணையதளத்தில் பெயர் மாற்றி பதிந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…