பிரதமர் மோடி, கொரோனா நிலவரம் கொரோனா தடுப்பூசி பணிகள் மற்றும் மருந்துகள், ஆக்சிஜன் கையிருப்பு போன்றவை குறித்து ஆய்வு நடத்தினார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கொரோனா நிலவரம் கொரோனா தடுப்பூசி பணிகள் மற்றும் மருந்துகள், ஆக்சிஜன் கையிருப்பு போன்றவை குறித்து ஆய்வு நடத்தினார்.
அவர் பேசுகையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் வீணாகும் தடுப்பூசியின் அளவு குறித்து கேட்டறிந்தார். இதுவரை 17.7 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும், 45 வயதுக்கு மேற்பட்ட பிரிவினரில் 31 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதாகவும் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், வைரஸ் பரவாமல் தடுக்க விரைவான மற்றும் முழுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 1 லட்சத்துக்கு மேற்பட்ட நோயாளிகளை கொண்டிருக்கும் 12 மாநிலங்கள் மற்றும் அதிக பாதிப்புகளை கொண்டிருக்கும் மாவட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தில், யூனியன் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஹர்ஷ் வர்தன், பியூஷ் கோயல், மன்சுக் மண்டவியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…