கொரோனா சிகிச்சை முடிந்த பிறகு குணமடைந்தவர்களுக்கு மூச்சு பிரச்சனை, உடல் வலி போன்ற பின் விளைவுகள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும், அண்மையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்தார். ஆனால், அவர் குணமடைந்த பிறகு அவருக்கு உடல் வலி இருந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த கொரோனா சிகிச்சைக்கு பிந்தைய உடல் பிரச்சனை தொடர்பாக, கோவிட் -19 தடுப்பு தேசிய பணிக்குழுவின் தலைவர் வி.கே. பவுல் கூறுகையில், ‘ கொரோனா சிகிச்சைக்கு பின்னர் வரும் உடல் மாற்றங்களை மருத்துவர் குழு கவனித்து வருகிறது. கொரோனா சிகிச்சைகள் பிற்காலத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.’ என தெரிவித்தார்.
இது குறித்து சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், ‘ கொரோனா தொற்று மற்றும் இறப்பு விகிதம் கடந்த 5 நாட்களில் குறைந்துகொண்டே வருகிறது. ‘என குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவில் 3 கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனையில் உள்ளதாகவும், அதில் ஒன்று மட்டும் அடுத்தகட்ட மனித சோதனைக்கு உட்படுத்த தயாராக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால், அதன் பெயரை கொரோனா தடுப்பு குழு வெளியிடவில்லை.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…