Categories: இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல் : 2029இல் 3 அமைப்புகளுக்கும் ஒரே தேர்தல்.! மத்திய அரசு புதிய முடிவு.?

Published by
மணிகண்டன்

நமது நாட்டில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு தனித்தனி தேர்தல் நடைபெற்று வருகின்றன. இது போக உள்ளாட்சி அமைப்புக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய மாநில அரசுகளுக்கான தேர்தல்களை ஒன்றாக ஒரே நேரத்தில் நடத்தினால் அரசுக்கு செலவு, நேரம் ஆகியவை அதிகளலவில் தேவைப்படாது என கருத்தில் கொண்டு மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கொண்டு வந்தது.

இதற்கென பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. அந்த உயர்மட்ட குழுவுக்கு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை வகித்து வருகிறார். குழுவானது ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டம் அண்மையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தனர். இதில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை.

இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து , ஒரேநாடு ஒரே தேர்தல் எனும் திட்டத்தின் கீழ், மத்திய மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்தன. இது பற்றிய முக்கிய முடிவுகள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வாய்ப்பில்லை. தொகுதி வரையறை, மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் உள்ளன. மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் கீழ், நாடாளுமன்றம் மற்றும் சட்ட சபைகளுக்கு மட்டுமல்லாது உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி கணக்கிட்டால் வரும் 2029ஆம் ஆண்டு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு  தேர்தல் நடத்தலாம் என்றும் அப்போது பல்வேறு மாநிலங்களில் ஆளும்கட்சியின் சட்டசபை ஆட்சி காலத்தை நீட்டிப்பு செய்தும், சில மாநிலங்களில் ஆளும்கட்சியின் சட்டசபை ஆட்சி காலத்தை குறைக்க செய்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தலாம் என்றும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago