முதல் நாளே மிரட்டல்.., இங்கிலாந்தை கதறவிட்ட ஜெய்ஸ்வால் – சுப்மன் கில்.!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் சதமடித்து அசத்தியுள்ளனர்.

Yashasvi Jaiswal- Shubman Gill

இங்கிலாந்து : இந்தியா VS இங்கிலாந்து முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ஷுப்மன் கில் 127, ரிஷப் பந்த் 65 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ஜெயிஸ்வால் 101 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் சதமடித்தனர். இந்தியாவின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் நாளில் சதம் அடித்தார். அவர் 159 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். மேலும், 4 வது இடத்தில் விளையாடிய கேப்டன் ஷுப்மான் கில்லும் சதம் அடித்தார். கில் 175 பந்துகளில் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

இது இங்கிலாந்து மண்ணில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு முதல் சதமாகும். அதே போல, கேப்டனாக பொறுப்பேற்ற பின் இது சுப்மன் கில்லுக்கு முதல் சதம். 79 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 328 ரன்கள் குவித்துள்ளது. அதன்படி, இங்கிலாந்தில் முதல் நாளில் 359 ரன்கள் எடுத்து இந்தியா பல சாதனைகளை முறியடித்தது.

இந்த சாதனைகளில் ஒன்று முதல் நாளில் இரண்டு சதங்கள். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் முதல் நாளில் இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் சதம் அடித்தது இதுவே முதல் முறை.  இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணத்தின் முதல் நாளிலேயே சதம் அடித்த முதல் இந்திய பார்ட்னர் ஷிப் என்ற பெருமையை கில்-ஜெய்ஸ்வால் பெற்றுள்ளனர். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது மூன்றாவது சம்பவமாகும்.

முன்னதாக 2001 ஆம் ஆண்டு, சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஜோடி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் முதல் நாளிலேயே சதம் அடித்திருந்தது, அடுத்ததாக 2017 ஆம் ஆண்டு, ஷிகர் தவான் மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஜோடி இலங்கை சுற்றுப்பயணத்தின் முதல் நாளிலேயே சதம் அடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்