Categories: இந்தியா

தயவு செய்து மணிப்பூர் மக்களை காப்பாற்றுங்கள்..! பிரதமர் மோடியிடம் மீராபாய் சானு வேண்டுகோள்..!

Published by
செந்தில்குமார்

மணிப்பூரில் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்று வீராங்கனை சாய்கோம் மீராபாய் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய நட்சத்திர பளுதூக்கும் வீராங்கனையும், டோக்கியோ ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனையுமான சாய்கோம் மீராபாய் சானு, மணிப்பூரில் நடந்து வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, மாநில மக்களைக் காப்பாற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், மணிப்பூரில் இனக்கலவரம் காரணமாக, பல விளையாட்டு வீரர்கள் பயிற்சி முகாம்களில் பங்கேற்க முடியவில்லை என்றும், குழந்தைகளின் படிப்பும் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்று கூறினார்.

மேலும், பெரும்பாலான மக்கள் உயிர் இழந்தனர். பலரது வீடுகள் எரிக்கப்பட்டன. மணிப்பூரில் எனக்கும் வீடுகள் உள்ளன. இப்போது நான் மாநிலத்தில் இல்லை. நான் இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன், உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு என்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மணிப்பூரில் கடந்த மாதம் மே 3 ஆம் தேதி பட்டியலின பழங்குடி (எஸ்டி) அந்தஸ்து கோரி மெய்டேய் சமூகத்தின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடித்த கலவரத்தில் இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

5 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

6 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

7 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

7 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

8 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

8 hours ago