Categories: இந்தியா

ரோஜ்கர் மேளா: 71,000 பேருக்கு இன்று பணி நியமன கடிதத்தை வழங்குகிறார் பிரதமர் மோடி.!

Published by
கெளதம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று பல்வேறு அரசுத் துறைகளில் சேருபவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்குகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று சுமார் 71,000 பணி நியமனக் கடிதங்களை காணொளி வழியாக புதிய பணியாளர்களுக்கு வழங்க உள்ளார். ரோஜ்கர் மேளா திட்டம் நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெறும், இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதுவரை, பிரதமர் மோடி 2.9 லட்சம் நபர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கியுள்ளார்.

புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளர்கள் கிராமின் டாக் சேவக்ஸ், இன்ஸ்பெக்டர் ஆஃப் இன்ஸ்பெக்டர், கமர்ஷியல் கம்-டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளார்க்-கம்-டைப்பிஸ்ட், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் கிளார்க், டிராக் மெயின்டனர், உதவி பிரிவு அதிகாரி, கீழ் பிரிவு எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.

இது போக, இன்று வழங்க இருக்கும் 71 ஆயிரம் பணிகளில், துணைப்பிரிவு அதிகாரி, வரி உதவியாளர்கள், உதவி அமலாக்க அதிகாரி, ஆய்வாளர்கள், நர்சிங் அதிகாரிகள், உதவி பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்பு வீரர், உதவி கணக்கு அதிகாரி, உதவி தணிக்கை அதிகாரி, பிரதேச கணக்காளர், தணிக்கையாளர், காவலர், தலைமை காவலர், உதவி கமாண்டன்ட், முதல்வர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், உதவிப் பதிவாளர், உதவிப் பேராசிரியர் ஆகிய பணிகள் அடங்கும்.

ரோஜ்கர் மேளா திட்டம் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் வகையில், இந்த முன்முயற்சி இளைஞர்களை மேம்படுத்துவதற்கும் தேசிய வளர்ச்சியில் பங்கேற்பதற்கும் அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

8 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

9 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

9 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

10 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

10 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

10 hours ago