பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐக்கிய நாடுகள் சபையில் உரை

Published by
Venu

பிரதமர் நரேந்திர மோடி இன்று  நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 75-ஆண்டு பொதுச் சபையில் (யுஎன்ஜிஏ) உரையாற்றவுள்ளார்.

கடந்த 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைக்கப்பட்டது. ஐ.நா.வின் முக்கிய நோக்கம் உலக நாடுகளுக்கிடையே அமைதி, நல்லுறவு, பாதுகாப்பு போன்றவற்றை ஏற்படுத்துவதே ஆகும்.

இந்த கூட்டம் நியூயார்க்கில் நடைபெறுகிறது.கொரோனா காரணமாக  தலைவர்கள் பங்கேற்க முடியாத நிலையில் இந்த கூட்டம் மெய்நிகர் முறையில் நடைபெறுகிறது. அதாவது உறுப்பு நாடுகளின் தலைவர்களின்  உரையை  முன்கூட்டியே  வீடியோவாக பதிவு செய்து அனுப்ப வேண்டும்.இந்த  வீடியோ கூட்டத்தில் ஒளிப்பரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஒவ்வொரு நாட்டின் தலைவர்களின் வீடியோக்களும் 15 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது ஐக்கிய நாடுகள் சபை.

 இந்தியாவின் முன்னுரிமைகள் குறித்து பிரதமர் மோடி கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் அவர் எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்சினைக்கு தீர்வு காண்பார் என்றும்  பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையை வலுப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உதவி வழங்குவதன் மூலம்  கொரோனா நோய்க்கு எதிரான உலகளாவிய ஒத்துழைப்புக்கு இந்தியாவின் பங்களிப்பை பிரதமர் எடுத்துரைக்க வாய்ப்புள்ளது.

Published by
Venu
Tags: #PMModiUNGA

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

33 seconds ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

10 minutes ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

39 minutes ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

1 hour ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

2 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

4 hours ago