அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் – மத்திய அரசு முடிவு

Published by
Venu

அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவை பொருத்தவரை தலைமைதேர்தல் ஆணையம் தயாரிக்கும் வாக்காளர் பட்டியல் மூலம்  தேர்தல்கள் நடைபெறுகின்றது.அந்தந்த மாநில தேர்தல் ஆணையங்களும் அரசியல் சாசன விதிகளின்படி  தனியாக வாக்காளர் பட்டியலை தயாரிக்கின்றது.இந்திய தேர்தல் ஆணையம் ,வாக்காளர் பட்டியலை தயாரிக்க பல்வேறு  மாநில தேர்தல் ஆணையங்களை பயன்படுத்திக்கொள்கின்றது.தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியல் மூலம் மாநிலங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும்  தேர்தல்கள் நடத்தப்படுவது வழக்கம்.

இதனால் இருமுறை வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்படுகின்றது. எனவே கூடுதல் செலவு இதனால் ஏற்படுகிறது.ஒரு சில சமயங்களில்  வாக்காளர் பட்டியலில் ஒரு சில வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுவிடுகிறது .இதனால் தேவை இல்லாத குழப்பம் ஏற்படுகிறது.இந்த குழப்பத்தை தவிர்க்க வரும் காலங்களில் மக்களவைத் தேர்தல் , மாநில சட்டசபைத் தேர்தல் , உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவற்றிக்கு ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக  மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இந்த மாத தொடக்கத்தில்  ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆலோசிக்க பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்து இருந்தது. இந்த கூட்டத்தில் சட்ட அமைச்சகத்தினர்  மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டு  கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.மேலும் மாநிலங்கள் உள்ளாட்சி தேர்தலுக்கும்  இந்திய தேர்தல் ஆணையம் தயாரிக்கும்  வாக்காளர் பட்டியலையே  பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  அரசின் இந்த முடிவுக்கு தேர்தல் ஆணையம் ,சட்டத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

Recent Posts

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

27 minutes ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

1 hour ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

2 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

2 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

2 hours ago

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…

3 hours ago