குஜராத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதேசமயத்தில், தடுப்பூசி போடும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், குஜராத் மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 7,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், ஒரே நாளில் 73 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டோருக்கு படுக்கை வசதியின்றி தத்தளித்து வரும் சொல்நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அம்மாநிலத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி “ஆல் பாஸ்” என்றும் அம்மாநில அரசுஅறிவித்துள்ளது. மேலும், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…