Murmu in Hyderabad [Image Source : Twitter/@ANI]
ஜனாதிபதி திரௌபதி முர்மு பெங்களூரில் இருந்து ஹைதராபாத் வந்தடைந்தார்.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 5 நாள் பயணமாக கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு ஜூலை 3ம் தேதி முதல் தனது பயணத்தை தொடங்கினார். இந்நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பெங்களூரில் இருந்து தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் வந்தடைந்துள்ளார்.
செகந்திராபாத் வந்தடைந்த ஜனாதிபதியை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதல்வர் கே.சந்திரசேகர ராவ், மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த பயணத்தில் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் அல்லோரி சீதாராமராஜுவின் 125 வது பிறந்தநாள் நிறைவு விழாவில் ஜனாதிபதி உரையாபற்றி வருகிறார்.
அதன்பிறகு, இன்று மாலை ஹக்கிம்பேட் விமானப்படை நிலையத்தில் இருந்து நாக்பூர் செல்லவுள்ளார். மேலும் புதன்கிழமை, கோண்ட்வானா பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுவதோடு, நாக்பூரில் உள்ள கோரடியில் உள்ள பாரதிய வித்யா பவனில் சமஸ்கிருதிக் கேந்திராவையும் அவர் திறந்து வைக்கிறார்.
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…