கர்நாடகாவிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே கருவிக்கு விலை நிர்ணயம்!

Published by
Rebekal

கொரோனா பெருந்தொற்று காலங்களில் அதிகம் சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே கருவிகள் பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் அந்த கருவிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதனால், அரசு மருத்துவமனைகளில் படுக்கை அறை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகள் இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். இந்நிலையில் பண வசதி இல்லாவிட்டாலும் நோயை குணப்படுத்த வேண்டும் என்பதற்காக மக்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்றாலும், அங்கு அளவுக்கு அதிகமான விலை வசூலிக்கப்படுகிறது.

நிலையில் கர்நாடக மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதன் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கர்நாடகாவில் 49 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 328 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.இதுவரை கர்நாடகாவில் 17.90 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

தற்பொழுது 5.17 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடக மாநிலத்திலும் தற்பொழுது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் உள்ள சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரேக்கான விலையை நிர்ணயிக்க மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளதாம்.

இது குறித்து கர்நாடகா மாநில சுகாதார அமைச்சர் சுதாகர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், அதாவது தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் உள்ள சிடி ஸ்கேனுக்கு 1500 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும், எக்ஸ்ரே எடுப்பதற்கு 250 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் மாநில அரசு விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

5 minutes ago

“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…

8 minutes ago

சென்னையில் இருந்து செல்லவும், வரவும்விருந்த 8 விமானங்கள் ரத்து.!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…

1 hour ago

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…

1 hour ago

“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!

வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…

2 hours ago

என்ன நடந்தாலும் கூலா இருப்பாரு.., விஜய் பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்த மமிதா பைஜு.!

சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…

2 hours ago