Categories: இந்தியா

அக்.1ம் தேதி நாடு முழுவதும் ‘ஒரு மணி நேரம்’ மக்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!

Published by
கெளதம்

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட திருநெல்வேலி – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை நேற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  நாட்டு மக்கள் அனைவரும் அக்டோபர் 1ம் தேதி, பொது இடங்களில் ஒரு மணி நேரம் தூய்மைப் பணியை மேற்கொள்ள வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து பேசுகையில், அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது, காந்தியடிகளுக்கு நாம் தூய்மை இயக்கத்தின் மூலம் அஞ்சலி செலுத்த வேண்டும்.

அக்டோபர் 1 ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தூய்மை பற்றிய ஒரு பெரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், உங்கள் தெரு, அல்லது சுற்றுப்புறம் அல்லது பூங்கா, ஆறு, ஏரி அல்லது வேறு எந்த பொது இடத்திலும் நீங்கள் நேரம் ஒதுக்கி பணியில் ஈடுபடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கனவே, ‘தூய்மை இந்தியா’ என்ற பெயரில் செப்டம்பர் 15 முதல் பிரம்மாண்ட தூய்மைப் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், அக்டோபர் 1 காலை 10-11 மணி வரை, பொது மக்கள் அனைவரும் தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி  அழைப்பு விடுத்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

9 minutes ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

12 minutes ago

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

1 hour ago

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்.!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…

2 hours ago

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

3 hours ago

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

5 hours ago