PM Modi [Image source : ANI]
தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட திருநெல்வேலி – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை நேற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்கள் அனைவரும் அக்டோபர் 1ம் தேதி, பொது இடங்களில் ஒரு மணி நேரம் தூய்மைப் பணியை மேற்கொள்ள வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து பேசுகையில், அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது, காந்தியடிகளுக்கு நாம் தூய்மை இயக்கத்தின் மூலம் அஞ்சலி செலுத்த வேண்டும்.
அக்டோபர் 1 ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தூய்மை பற்றிய ஒரு பெரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், உங்கள் தெரு, அல்லது சுற்றுப்புறம் அல்லது பூங்கா, ஆறு, ஏரி அல்லது வேறு எந்த பொது இடத்திலும் நீங்கள் நேரம் ஒதுக்கி பணியில் ஈடுபடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கனவே, ‘தூய்மை இந்தியா’ என்ற பெயரில் செப்டம்பர் 15 முதல் பிரம்மாண்ட தூய்மைப் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், அக்டோபர் 1 காலை 10-11 மணி வரை, பொது மக்கள் அனைவரும் தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…