PM Modi [Image source : ANI]
தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட திருநெல்வேலி – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை நேற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்கள் அனைவரும் அக்டோபர் 1ம் தேதி, பொது இடங்களில் ஒரு மணி நேரம் தூய்மைப் பணியை மேற்கொள்ள வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து பேசுகையில், அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது, காந்தியடிகளுக்கு நாம் தூய்மை இயக்கத்தின் மூலம் அஞ்சலி செலுத்த வேண்டும்.
அக்டோபர் 1 ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தூய்மை பற்றிய ஒரு பெரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், உங்கள் தெரு, அல்லது சுற்றுப்புறம் அல்லது பூங்கா, ஆறு, ஏரி அல்லது வேறு எந்த பொது இடத்திலும் நீங்கள் நேரம் ஒதுக்கி பணியில் ஈடுபடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கனவே, ‘தூய்மை இந்தியா’ என்ற பெயரில் செப்டம்பர் 15 முதல் பிரம்மாண்ட தூய்மைப் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், அக்டோபர் 1 காலை 10-11 மணி வரை, பொது மக்கள் அனைவரும் தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…