டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடல்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் வரும் 31ம் தேதி முதல் தடகள போட்டிகள் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள 120க்கும் மேற்பட்ட இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி வரும் 13ம் தேதி மாலை 5 மணிக்கு காணொளி மூலம் கலந்துரையாடி வாழ்த்து தெரிவிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க இந்திய அணியின் முதற்குழு வரும் 17ம் தேதி டோக்கியோ புறப்பட உள்ளதாக இந்திய ஒலிம்பிக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 90 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய முதற்குழு ஏர் இந்தியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட உள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் ஒளிருகிணைப்பாளர்கள் தலைப்பில் இருந்து இதுவரை எவ்வித ஒப்புதலும் வராதது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் கடைசி நேர சிக்கல்களை தவிர்க்கும் விதமாக பயணத்தை திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்டுகிறது.
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…