FlagsOffVandeBharat [Image Source : Twitter/@PIBKolkata]
பிரதமர் நரேந்திர மோடி கோரக்பூர்-லக்னோ, ஜோத்பூர்-அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், கோரக்பூர் ரயில் நிலைய மறுவடிவமைப்பு திட்டத்திற்கு ரூ.498 கோடியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதன்பின், கோரக்பூர்-லக்னோ மற்றும் ஜோத்பூர்-அகமதாபாத்(சபர்பதி) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோரக்பூரில் இருந்து புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் காலை 6:05 மணிக்கு புறப்பட்டு காலை 10:20 மணிக்கு லக்னோ நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் அயோத்தியை இரு நகரங்களுக்கும் இணைக்கும். இது பஸ்தி, அயோத்தி, லக்னோ ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும். இந்த ரயில் சனிக்கிழமையைத் தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும்.
ஜோத்பூரிலிருந்து காலை 5:55 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதியம் 12:05 மணிக்கு அகமதாபாத் (சபர்மதி) வந்தடையும். இந்த ரயில் பாலி, அபு ரோடு, பாலன்பூர் மற்றும் மெஹ்சானா நகரங்களை இணைக்கும். வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் இந்த ரயில் செவ்வாய் கிழமைகளில் இயக்கப்படாது.
மேலும், இந்தியாவில் இதுவரை 23 வழி தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவையால். நாட்டில் உள்ள வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…