PMModi [Image source : X/@ani]
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ‘துடிப்பான குஜராத்’ என்ற பெயரில் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இதற்கு முன்னதாக அகமதாபாத்தில் உள்ள அறிவியல் நகரில் ரோபோ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள பிரதமர் மோடி, அறிவியல் நகரில் நடைபெறும் குஜராத் குளோபல் உச்சி மாநாடு 2023-ன் 20 ஆண்டு நிறைவை குறிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவவ்ரத் மற்றும் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இதில் தொழில்துறை சங்கங்கள், வர்த்தகத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், இளம் தொழில்முனைவோர், உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இதனையடுத்து, சோட்டா உதேபூர் மாவட்டத்தில் ரூ.5,206 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
மிஷன் ஸ்கூல்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் திட்டத்தின் கீழ், 4,505 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் திட்டங்களைத் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார். 22 மாவட்டங்களில் உள்ள 7,500 கிராமங்களில் 20 லட்சம் பயனாளிகள் பயன்பெறும் கிராம வைஃபை வசதிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…