Categories: இந்தியா

ராஜஸ்தானில் ரூ.7,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி .!

Published by
செந்தில்குமார்

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் சுமார் 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

இதில் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, சுமார் ரூ.4500 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மெஹ்சானா-பதிண்டா-குர்தாஸ்பூர் எரிவாயு குழாய் பிரதமரால் அர்ப்பணிக்கப்படுள்ளது. ஆண்டுக்கு 86 லட்சம் சிலிண்டர்களை விநியோகிக்கும் அபு சாலையில் உள்ள ஹெச்பிசிஎல்லின் எல்பிஜி ஆலையையும் பிரதமர் அர்ப்பணித்தார்.

ஐஓசிஎல், அஜ்மீர் பாட்டில் ஆலையில் கூடுதல் சேமிப்பகத்தையும் அவர் அர்ப்பணித்தார். தேசிய நெடுஞ்சாலை 12 இல் தராஹ்-ஜலவர்-தீந்தர் பிரிவில் ரூ.1,480 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட 4-வழிச் சாலையை அர்ப்பணித்தார். இந்த திட்டம் கோட்டா மற்றும் ஜலவார் மாவட்டங்களில் இருந்து சுரங்கங்களின் விளைபொருட்களின் போக்குவரத்தை எளிதாக்க உதவும்.

மேலும், சவாய் மாதோபூரில் ரயில்வே மேம்பாலம் இரண்டு வழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் திட்டமும் உள்ளது. இந்த திட்டம் போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபட உதவும். தொடர்ந்து, ரயில்வே திட்டங்களில் சித்தோர்கர் – நீமுச் ரயில் பாதை மற்றும் கோட்டா – சித்தோர்கர் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டங்களும் அடங்கும்.

இத்திட்டங்கள் சுமார் ரூ.650 கோடிக்கும் அதிகமான செலவில் இத்திட்டங்கள் முடிக்கப்பட்டு, இப்பகுதியில் ரயில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும். ஸ்ரீநாத்ஜியின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை சுற்றுலாப் பயணிகள் அனுபவிக்கக்கூடிய நவீன ‘சுற்றுலா விளக்கம் மற்றும் கலாச்சார மையம்’ நாததுவாராவில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், கோட்டாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் நிரந்தர வளாகத்தையும் பிரதமர் மோடி அர்ப்பணித்தார். இந்த திட்டங்களைத் தொடங்கிவைக்க ராஜஸ்தானுக்குச் சென்ற பிரதமர் மோடி, இதன்பிற்கு மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் செல்கிறார். அங்கு 19,000 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

3 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

3 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

3 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

4 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

5 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

5 hours ago