பீகாரின் நகர்ப்புற உள்கட்டமைப்பு குறித்த 7 திட்டங்களை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
குடிநீர் விநியோகத் திட்டங்கள், கழிவுநீர் மேலாண்மை திட்டங்கள் மற்றும் ஒரு ஆற்றுப்படுகை மேம்பாட்டு திட்டம் என மொத்தம் ரூ.541 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த திட்டங்களை, பீகார் நகர்ப்புற மேம்பாட்டு மற்றும் வீட்டு வசதித்துறையின் கீழ் செயல்படும். வளர்ச்சி திட்டங்கள் தொடக்க விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் பங்கேற்றார்.
அதாவது, இந்த 7 வளர்ச்சி திட்டங்களில் நமாமி கங்கா திட்டத்தின் கீழ் பாட்னா மாநகரின் பியுர் மற்றும் கர்மாலிசாக் ஆகிய 2 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படவுள்ளது. அம்ருத் மிசன் திட்டத்தின் கீழ் சிவான் மற்றும் சாப்ரா ஆகிய நகரங்களில் குடிநீர் விநியோக திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. அம்ருத் மிசனின் கீழ் மங்கர் மாவட்டத்தில் மற்றொரு குடிநீர் விநியோக திட்டத்திற்கான அடிக்கலையும் பிரதமர் மோடி நாட்டினார்.
மேலும், நமாமி கங்கா திட்டத்தின் கீழ், முசாஃபர்பூர் ரிவர்ஃப்ரண்ட் மேம்பாட்டு திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் முசாஃபர்பூரின் 3 மலைத்தொடர்களும் மேம்படுத்தப்படும்.
ஆற்று கரையோர பகுதிகளில் அடிப்படை வசதிகளான இலவச கழிவறைகள், மாற்று அறை, டவர் ஆகியவை அமைக்கப்படவுள்ளன. இந்த திட்டங்கள் அனைத்தையும் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…