இந்த கொரோனா காலத்தில் எந்த ஒரு ஏழையும் பசியோடு தூங்கக் கூடாது என்பதற்காக தீவிரமாக உழைத்தோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி ரூ.9,800 கோடி மதிப்பிலான “சர்யு நஹர் தேசிய திட்டம்”(நீர் கால்வாய் திட்டத்தை) உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூரில் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் 1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பின் பல காரணங்களால் தடைபட்டு வந்த நிலையில், கடந்த2016-ஆம் ஆண்டிலிருந்து பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சயீ யோஜனா திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு திட்டப் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ. 9800 கோடி, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இதற்காக ரூ.4600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா மற்றும் ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் திட்டம் இதில் அடங்கும். இந்த திட்டம் 14 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும்.
மேலும், முக்கியமாக கிழக்கு உ.பி.யில் உள்ள 6,200 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 29 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் சர்யு நஹர் தேசிய திட்டத்திற்கான தொடக்க விழாவில் பேசிய பிரதமர், நாட்டின் வளர்ச்சிக்கு தண்ணீர் பஞ்சம் ஒரு தடையாக மாறாமல் இருப்பது முக்கியம். நதிநீரை சரியாகப் பயன்படுத்துவதே அரசின் முதன்மையான முன்னுரிமை. சாரியு நஹர் தேசிய திட்டத்தை நிறைவு செய்தது நேர்மையான நோக்கங்களுக்கும் திறமையான பணிக்கும் சான்றாகும்.
இந்த கொரோனா காலத்தில் எந்த ஒரு ஏழையும் பசியோடு தூங்கக் கூடாது என்பதற்காக தீவிரமாக உழைத்தோம். இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் ஹோலி பண்டிகை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…