இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) இடையேயான உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருகின்றன. இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று (ஜனவரி 9) அகமதாபாத் விமான நிலையத்தை அடைந்தார். அவரை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ‘ குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டில்’ பங்கேற்க வந்துள்ளார்.
முகமது பின் சயீதுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இரு தலைவர்களும் சாலை மார்க்கமாக காரில் சென்றனர். சாலையோரம் இரு தலைவர்களும் கைகளில் கொடி ஏந்தியபடி ஏராளமான மக்கள் வரவேற்றனர். இரு தலைவர்களையும் வரவேற்க கோஷங்களும் எழுப்பப்பட்டன.
துடிப்பான குஜராத் என்ற தலைப்பிலான 10-வது உலகளாவிய உச்சி மாநாடு நாளை தொடங்கி 12-ம் தேதி வரை காந்திநகரில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் 34 கூட்டணி நாடுகளும், 16 அமைப்புகளும் பங்கேற்க உள்ளன. குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டில் பங்கேற்க பல நாடுகளின் பெரிய தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…