பிரதமரின் 20 லட்சம் கோடி நிதி – விவசாயிகளுக்கு எவ்வளவு? எதற்கு?

Published by
Rebekal

கொரோனா நிவாரண நிதியாக பிரதமர் அளித்துள்ள 20 லட்சம் கோடி பணத்தில் விவசாயிகளுக்கு எவ்வளவு அளிக்கப்படும் மற்றும் எந்தெந்த விவசாய துறைகளுக்கு அளிக்கப்படும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.  

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தற்பொழுது வரை தனது கோர முகத்தை தான் காண்பித்து வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸால் பொருளாத சிக்கல் அதிகம் ஏற்பட்டுள்ளதால் பிரதமர் மோடி மக்களுக்கு நிவாரண நிதியாக 20 லட்சம் கோடி பணத்தை கொடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். 

அதன் படி இந்த பணம் யாருக்கெல்லாம் செல்லும் என மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த தினங்களில் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட அறிவிப்பை வெளியிட்டார். 

இந்நிலையில், தற்பொழுது நேரலையில் அறிக்கை வெளியிடும் சீதாராமன் இன்று 11 துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் 8 விவசாய துறை சம்மந்தப்பட்டது தான். 

அதன் படி, சணல் மற்றும் பருப்பு உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும், சவாலான சூழலில் பணியாற்றும் பலர் விவசாய துறையை சார்ந்தே உள்ளதாகவும் கூறியுள்ளார். 

மேலும், 2 மாதங்களில் ரூ.74,300 கோடிக்கு உணவு தானியங்கள் மற்றும் 560 லட்சம் லிட்டர் பால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் விளைவிக்கப்படும் மரவள்ளி கிழங்கு சர்வதேச நிலையை அடைய உதவுள்ளதாகவும் கூறியுள்ளார். 

இதன் படி, வேளாண் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடியும், குறு உணவு நிறுவனங்களை உருவாக்குவதற்காக ரூ.10 ஆயிரம் கோடியும், விவசாயப் பொருள்கள் சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடியும் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், ஊரடங்கு காலத்தில் பீமயோஜனா திட்டத்தில் விவசாயிகளுக்கு 6,400 கோடி நிலுவை தொகையும், பிரதமரின் கிஷான் திட்டத்தில் ரூ.18,700 கோடியும் விவசாயிகளது வாங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். 

ஒரு இடத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை கண்டறிந்து, அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Published by
Rebekal

Recent Posts

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

26 minutes ago

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

2 hours ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

3 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

5 hours ago

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…

5 hours ago