accident [Imagesource : Theindianexpress]
தனியார் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ பேருந்து மீது மோதிய விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுச்சேரியின் புஸ்ஸி என்ற இடத்தின் வீதியில் தனியார் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் 7 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் 2 முதல் 5 வகுப்பு படிப்பவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
விபத்து நடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவலை தெரிவிக்க உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள். தற்போது இது பற்றி விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,முதற்கட்ட விசாரணையில் பேருந்து வேகமாக வந்த காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் என தெரிய வந்துள்ளது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…