மின்சாரத்தை மிச்சப்படுத்த அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றிய பஞ்சாப் முதல்வர்…!

Published by
லீனா

மின்சாரத்தை மிச்சப்படுத்த அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை பஞ்சாப் முதல்வர் மாற்றியுள்ளார். 

பொதுவாகவே கோடை காலங்களில் மின்சாரத்தின் தேவை அதிகரிப்பது வழக்கமானதுதான். பல இடங்களில் மின்தடையும் ஏற்படுவதுண்டு. கோடைகாலலங்களில் நண்பகலில் மின்நுகர்வு உச்சத்தை எட்டுவதுண்டு.  கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய இந்த சிக்கலை எதிர்கொள்வதற்காக அரசு அலுவலகங்களில் மின்சாரத்தை சேமிக்கும் வண்ணம் பஞ்சாப் முதல்வர் புதிய திட்டம் ஒன்றை அறிவித்தார்.

அதன்படி காலையில் முன்கூட்டியே அரசு அலுவலகங்கள் திறந்து மின் நுகர்வு உச்சத்தை எட்டும் நண்பகல் வேளையில் பணியை முடிப்பதற்காக புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளார். அதன்படி காலை 7:30 மணி முதல் மதியம் 2 மணி வரை அரசு அலுவலகங்கள் செயல்படும் என பஞ்சாப் முதல்வர் அறிவித்திருந்தார்.

இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, இன்று காலை 7:30 மணிக்கு அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தனது அலுவலகத்தில் வந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். ஜூலை 15ஆம் தேதி வரை இந்த பரிசோதனை முயற்சி தொடரும் என்றும், அவசியம் என்றால் மேலும் மிக நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

11 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

12 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

13 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

13 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

14 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

14 hours ago