Categories: இந்தியா

சுதந்திர தின விழாவில் கடைசி இருக்கையில் ராகுல் காந்தி! சர்ச்சையான விவகாரம்…

Published by
கெளதம்

டெல்லி : செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், 10 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்ற முதல் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெற்றுள்ளார்.

78வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக இந்திய தேசியக்கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பில் உள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவருக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்குவதே மரபு. ஆனால், ராகுலுக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி கடைசி வரிசைக்கு முன் இருக்கையில், பாரிஸ் ஒலிம்பிக் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களான மனு பாக்கர், பிஆர் ஸ்ரீஜேஷ் ஆகியோருடன் ராகுல் காந்தி அமர்ந்திருந்தார்.

முன் வரிசையில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சிவராஜ் சிங் சவுகான், அமித் ஷா மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் அமர்ந்திருந்த நிலையில், கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்தில் உள்ள ராகுல் காந்திக்கு கடைசி வரிசைக்கு முன் வரிசையில் இரண்டாவது இடம் ஒதுக்கப்பட்டது விவாதத்தை எழுப்பியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் இருந்ததாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெரும் அளவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடங்களை பெறாததாலும் 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி காலியாக இருந்தது. ஆனால், இப்பொது 99 தொகுதியுடன் எதிர்க்கட்சி என்ற அங்கீகாரத்தை காங்கிரஸ் கட்சி இந்த முறை பெற்றுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்  இருக்கையில் ராகுல் காந்தி அமைந்திருந்தார். அப்படி இருக்கையில், சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவருக்கான மரியாதை ஏன் கொடுக்கவில்லை என்றும், அவருக்கான இருக்கையும் சரியாக ஒதுக்கப்படாதது குறித்தும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

கடந்த காலத்தை பின்னோக்கி பார்க்கும் பொழுது, அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியின் போது, ​​சோனியா காந்திக்கு சுதந்திர தின விழாவில், முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

2 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

2 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

4 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

4 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

6 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

7 hours ago