Rahul Gandhi [Image source : PTI]
மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற ராகுல் காந்தி, மேல்முறையியீடு செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடகாவில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. இதன்படி அவர் வகித்து வந்த கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் தனது தண்டனையை நிறுத்தி வைக்குமாறு மேல்முறையீடு செய்து இருந்தார் ராகுல் காந்தி. அந்த மனு மீதான விசாரணை கடந்த சில மாதங்கள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இருதரப்பு வாதங்களும் முடிந்து இன்று அதன் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த வழக்கில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் ராகுல்காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட முடியும். அதுவே அவருக்கு எதிராக தீர்ப்பு வந்தால் வரும் 2023 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். இதனால் இந்த தீர்ப்பை இந்திய அரசியல் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கக்கூடிய தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…