கடந்த 22 மாதங்களில் ரயில் விபத்துக்கள் காரணமாக பயணிகள் இறப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி ரயில்வேயில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புகள் குறித்து கேள்வி எழுப்பினார்.இதற்கு மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்து பேசினார்.அவர் பேசுகையில், கடந்த 22 மாதங்களில், ரயில் விபத்துக்கள் காரணமாக பயணிகள் இறப்பு எதுவும் ஏற்படவில்லை.கடைசியாக ஏற்பட்ட இறப்பு 2019-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி அன்று நடந்தது.கடந்த ஆறு ஆண்டுகளில், நாங்கள் பாதுகாப்புக்கு அதிக அளவில் கவனம் செலுத்தியுள்ளோம்.
இந்தியாவில் 34,665 ரயில்வே பாலங்கள் உள்ளன, அவை 100 ஆண்டுகளுக்கும் மேலானவை. ஆனால் அமைச்சகம் ஒரு வலுவான ஆய்வு முறையைக் கொண்டுள்ளது.மேலும் அவர் பேசுகையில்,பாலங்களின் நிலையை கண்காணிக்க ட்ரோன்கள் சரியான அணுகுமுறையாக இருக்காது. இது சென்சார்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், இழுவிசை அழுத்தத்தை சரிபார்க்கிறது என்று பேசியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…