Categories: இந்தியா

ராஜஸ்தான் : 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற கொடூரம்.!

Published by
மணிகண்டன்

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள நிரிசிங்புரா கிராமத்தில் 14 வயது சிறுமி நேற்று காலை தங்கள் வீட்டு கால்நடைகளை அருகில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் மதிய வேளையில் கால்நடைகள் வீட்டுக்கு வந்துவிட்டன.ஆனால் சிறுமி வீடு திரும்பவில்லை.

இதனால் சிறுமி வீட்டை சேர்ந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேட ஆரம்பித்துவிட்டனர். இறுதியில் அருகில் உள்ள நிலக்கரி உலை பகுதி அருகே எதோ எரிவது போல தெரிந்துள்ளது. அங்கே மனித உடல் எலும்பு இருந்துள்ளது. மேலும் சிறுமியின் வளையல், செருப்பு ஆகியவை அங்கு இருந்துள்ளது.

இதனை அடுத்து சிறுமி வீட்டார் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விசாரணையை தொடர்ந்தனர். அப்போது விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் நிலக்கரி சுரங்கத்தில் எரிக்கப்பட்டதாக தெரியவந்தது.

இதனை அடுத்து, சிறுமி குடும்பத்தார் கூறியதன் பெயரில் 3 பேரை சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

36 minutes ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

52 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

2 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

2 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

2 hours ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago