ராமர் கோயில் கட்டுமானத்திற்கான “பூமி பூஜை” விழாவில் பங்கேற்பதற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு அனுப்பப்படாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நீண்ட காலமாக சட்டப்போராட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் இறுதியாக உச்சநீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தது. எனவே அங்கு கோயிலை கட்டுவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளது.
பிரதமர் மோடி ஆகஸ்ட் -5 ஆம் தேதி ராமர் கோயில் கட்டுமான பணிகளைத் தொடங்கி வைப்பதற்கு “பூமி பூஜை” விழாவிற்கு அயோத்தியாவுக்கு செல்கிறார். லட்சக்கணக்கான மக்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள ஆர்வம் கொண்டுள்ளார்கள்.இந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்கிறார்.இந்த விழாவில் பங்கேற்க முக்கிய நபர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தான் சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு அனுப்பப்படாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று தீவிரமாக இருந்த கட்சிகளில் ஓன்று சிவசேனா என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…