ரேபிட் டெஸ்ட் கருவிகள் விவகாரம்.! சீன தூதரகம் வெளியிட்ட அதிரடி அறிக்கை.!

Published by
மணிகண்டன்
ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கருவிகளை சீனாவிடம் திருப்பி அனுப்ப மத்திய அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியது தொடர்பாக சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை விரைவாக கண்டறிய பயன்படும் ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கருவிகளை மத்திய அரசானது சீனாவிடம் இருந்து வாங்கியது. ஆனால், அந்த கருவிகளில் இருந்து சரியான முடிவு தெரியவராததால் சீன நிறுவனத்திடம் இருந்து வாங்கிய பொருட்களை சீனாவிடம் திருப்பி அனுப்ப மத்திய அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியது.
இந்த விவகாரம் குறித்து, டெல்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கொரோனா வைரஸ் தற்போது மனித குலத்தின் பொது எதிரி. அதனை வெல்ல கூட்டாக செயல்படுவது முக்கியம். கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து இந்தியா-சீனா இடையே நல்ல தகவல் தொடர்பு நிலவி வருகிறது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தனது அனுபவங்களை இந்தியாவிடம் சீனா பகிர்ந்து கொண்டு வருகிறது. இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாகவும் வழங்கியுள்ளது. சீனாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களானது தரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அப்படி இருக்கையில், சிலர், சீன பொருட்கள் தரமற்றவை என்று குற்றச்சாட்டு கூறுவது நியாயமானது அல்ல. காரணங்களை முன்கூட்டியே உருவாக்கிக்கொண்டு குறை சொல்கிறார்கள்.
இதே கருவிகள் ஐரோப்பா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அங்கெல்லாம் இக்கருவிகள் நன்றாக செயல்படுகின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய மதிப்பீடு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. சீனாவின் உண்மைத்தன்மையை இந்தியா மதித்து நடக்கும் என்று நம்புகிறோம். சீன நிறுவனங்களுடன் கலந்து பேசி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பெறும் என நம்புகிறோம்.’ என சீன தூதரகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Published by
மணிகண்டன்

Recent Posts

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

4 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

56 minutes ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

16 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

18 hours ago