சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என்றால் தளர்வு ரத்து.!

Published by
Dinasuvadu desk

சமூக இடைவெளி மற்றும் பிற விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அந்த பகுதிகளுக்கு சீல் வைக்கப்படும். மேலும் தளர்வுகள் ரத்து செய்யப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் நேற்று வரை 42,836 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனாவால் இதுவரை 1389 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை  11,762 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசு மேலும் இரண்டு வாரம் ஊரடங்கு நீடித்து சில தளர்வுகளை அறிவித்தது. இதை தொடர்ந்து டெல்லியில் முன்பு இருந்த ஊரடங்கை விட நேற்று சில தளர்வுகளுடன் வேலைகள் மேற்கொள்ளவும், கடைகள் திறக்கவும் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்தார்.

அதன் படி நேற்று கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது. மதுபானக் கடைகள் திறந்ததால் மதுபான பிரியர்கள் சமூக இடைவெளி விதிமுறைகளை மீறினர்.

இந்நிலையில்,  அரவிந்த் கெஜ்ரிவால் இதுகுறித்து கூறுகையில், சமூக இடைவெளி மற்றும் பிற விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அந்த பகுதிகளுக்கு சீல் வைக்கப்படும். மேலும் தளர்வுகள் ரத்து செய்யப்படும் என கூறினார். நாம் அனைவரும் பொறுப்புள்ள குடிமக்களைப் போல நடந்து கொள்ளவும். கொரோனா வைரஸை தோற்கடிக்க  முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றவும் என்று அவர் கூறினார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

26 minutes ago

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்.!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…

1 hour ago

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

2 hours ago

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

4 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

5 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

6 hours ago