டிஆர்பி மோசடி வழக்கில் ரிபப்ளிக் டிவி சி.இ.ஓ கைது..!

Published by
murugan

டிஆர்பி மோசடி வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் காஞ்சந்தானி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விகாஸ் காஞ்சந்தனி மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார். அவர் முன் ஜாமீனுக்காக நீதிமன்றத்தை அணுகிய பின்னர் கைது செய்யப்பட்டது. இந்த வழக்கில் காஞ்சந்தனி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பார்வையாளர் எண்ணிக்கையை கணக்கிடும் டி.ஆர்.பியில் மோசடி நடந்ததாக கூறி ஹன்சா ஆராய்ச்சி அதிகாரி நிதின் தியோகர் அளித்த புகாரைத் தொடர்ந்து மும்பை போலீசார் அக்டோபர் 6 ஆம் தேதி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். அதில் ரிபப்ளிக் தொலைக்காட்சி  உட்பட மூன்று சேனல்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதிக டிஆர்பி காரணமாக, விளம்பரங்களை அதிக கட்டணம் வசூலிக்க முடியும். இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய சேனல்கள் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன. இதைத்தொடர்ந்து, ரிபப்ளிக் தொலைக்காட்சி மூத்த பத்திரிகையாளரும், சேனலின் தலைமை ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமியை மும்பை காவல்துறையினர் தற்கொலைக்கு தூண்டியதாக மற்றொரு பழைய வழக்கில் கைது செய்தனர். இருப்பினும், அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கடந்த வியாழக்கிழமை மும்பை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார், அதில், தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மேலும் விசாரணையை நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

8 minutes ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

48 minutes ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago