மன்மோகன் சிங் சொன்னதை எங்கள் அரசு செய்து இருக்கிறது – பிரதமர் மோடி

Published by
பாலா கலியமூர்த்தி

குடியரசு தலைவரின் கேட்காமலேயே பலரும் அது குறித்து விமர்சனம் செய்கின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், குடியரசு தலைவர் உரை வலிமையானது என்பதால் அதை கேட்காதவர்களிடம் கூட சென்று சேர்ந்து இருக்கிறது. இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. வாய்ப்புகளுக்கான நாடக மாறியுள்ளது. தற்போது நிறைய வாய்ப்புகள் கொட்டி கிடைக்கின்றன.

இளைஞர்கள் தங்கள் கனவுகளை எட்டிப்பிடிக்க தற்போதுள்ள வாய்ப்புகளை நழுவவிட அனுமதிக்கமாட்டோம். கொரோனாவுக்காக விளக்கேற்றும் நிகழ்வை கூட சிலர் கிண்டல் செய்தனர். ஏழைகள் கூட நாட்டின் ஒற்றுமைக்காக வீடுகளில் விளக்குகளை ஏற்றினார்கள்.  அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக விளக்கேற்றும் நிகழ்வை கூட சிலர் கிண்டல் செய்தனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளுக்கு வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்கு சுதந்திரம் தேவை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். வேளாண் சட்டங்களில் திருத்தம் தேவை என மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பேசியதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி, அவர் சொன்னதை எங்கள் அரசு செய்து காட்டியுள்ளது என குறிப்பிட்டார்.

மேலும் விவசாயி பிரச்சனைகள் குறித்து பேசுவோர் சிறுவிவசாயிகளை மறந்து விடுகின்றனர். விவசாயிகள் போராட்டம் எதனால் நடக்கிறது என விரிவான விவாதம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். விவசாயிகள் நலன் குறித்து தொடர்ந்து சிந்தித்து நடவடிக்கைள் எடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“ஓட விருப்பம் இல்லைனா சத்தமா ‘No’ சொல்லு”…கில்லை கிண்டல் செய்த ஜெய்ஸ்வால்!

“ஓட விருப்பம் இல்லைனா சத்தமா ‘No’ சொல்லு”…கில்லை கிண்டல் செய்த ஜெய்ஸ்வால்!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணி 85 ஓவர்களில் 359/3…

1 minute ago

முதல் நாளே மிரட்டல்.., இங்கிலாந்தை கதறவிட்ட ஜெய்ஸ்வால் – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : இந்தியா VS இங்கிலாந்து முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. முதல் நாள்…

18 minutes ago

மத்தியஸ்தம் செய்ய விரும்பல… ரஷ்யா கருத்துக்கு பதில் சொன்ன டிரம்ப்!

மாஸ்கோ : கடந்த ஜூன் 21-ஆம் தேதி மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்தை…

39 minutes ago

“விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை”…எடப்பாடி பழனிசாமி கருத்து!

மதுரை : மாவட்டத்தில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு (முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு)…

1 hour ago

விராட், ரோஹித் இல்லாமையே கெத்து காட்டும் இந்தியா! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கேப்டன் கில்!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ்…

2 hours ago

சென்னையில் மூத்த குடிமக்கள் இலவச பயணம் – இன்று முதல் டோக்கன்.!

சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…

2 hours ago