இந்தியா

சீனாவில் சுவாச கோளாறு பிரச்சனை..! இந்தியாவிற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

Published by
லீனா

கடந்த 2020-ஆம் ஆண்டு சீனாவில் பரவிய கொரோனா தொற்று, உலக நாடுகள் முழுவதும் பரவியது. இதனால், பல லட்சம் பேர் உயிரிழந்த நிலையில், கோடிக்கணக்கானோர் இந்த தோற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது சீனாவில், பருவகால சுவாச நோய் தொற்று அதிகரித்துள்ளது. இதனால், சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சீனாவில் புதியதாக ஏதேனு சுவாச நோய் தொற்று உருவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பி இருந்தது. இதுகுறித்து விளக்கமளித்த சீன சுகாதரத்துறை அமைப்பு பருவகால சமயத்தில் இம்மாதிரியான சுவாச நோய் தொற்று எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனவும் புதியதாக எந்த வைரஸ் தொற்றும் ஏற்படவில்லை என்று தெரிவித்து இருந்தது.

சீனாவில் அதிகரிக்கும் காய்ச்சல்.. புதிய வைரஸ் கண்டறியப்படவில்லை.! WHO-விடம் சுகாதாரத்துறை தகவல்.!

இந்த நிலையில், சீனாவில் சுவாச கோளாறு பரவலையடுத்து மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மருத்துவமனை படுக்கைகள், தடுப்பூசி, ஆக்சிஜன் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாநில அரசுகள் கோவிட்-19 திருத்தப்பட்ட கண்காணிப்பு வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுவாச பிரச்சனை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

20 minutes ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

1 hour ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

2 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

2 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

2 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

3 hours ago