நடிகை ரியா சக்கரபோர்த்தி போதைப்பொருட்கள் வாங்கினார் எனவும், அவர் அதனை உட்கொள்ளவில்லை என நடிகர் டாப்ஸீ தெரிவித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் திடீர் திருப்பமாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவரின் காதலியான ரியாவின் தம்பி சோவிக் மற்றும் சாமுவேல் மிரண்டாவீடுகளில் சோதனை நடைபெற்ற பின்னர், இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இருவரையும் வருகின்ற 9 -ம் தேதி வரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் காலை ரியா வீட்டிற்கு சென்று நேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கினர்.
பின்னர், மதியம் 12 மணியளவில் ரியா போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அங்கு அவரிடம் 6 மணி விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, ரியா மீண்டும் ஆஜராக போதைப்பொருள் தடுப்பு பிரிவு நேற்று சமன் அனுப்பியது. இதனால், ரியா சக்கரபோர்த்தி கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலிஸாரால் நடிகை ரியா சக்கரபோர்த்தி கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில், நடிகர் ரியா சக்கரபோர்த்தி போதைப்பொருட்கள் வாங்கியுள்ளதாகவும், அதனை உட்கொள்ளவில்லை என நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து என்.டி.டி.வி. செய்தியை ரி-ட்வீட் செய்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், ரியா போதைப்பொருள் உட்கொள்ளவில்லை எனவும், அது சுஷாந்திற்காக வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், நடிகர் சுஷாந்த் உயிரோடு இருந்தால், அவரையும் கைது செய்திருப்பார்கள். மேலும், சுஷாந்த்தை போதைப்பொருள் எதுக்கு ரியா வலியுறுத்தியிருக்கலாம் அல்லது வாங்கித்தரச்சொல்லி ரியாவை சுஷாந்த் வலியுறுத்தி இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…