ராபர்ட் வதேரா டெல்லியில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு பெட்ரோல் விலை உயர்வுக்கு தனது எதிர்ப்பினை பதிவு செய்தார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.ஆகவே பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா தலைநகர் டெல்லியில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு பெட்ரோல் விலை உயர்வுக்கு தனது எதிர்ப்பினை பதிவு செய்தார்.டெல்லியில் உள்ள கான் மார்க்கெட்டில் இருந்து தனது அலுவலகத்திற்கு வத்ரா சைக்கிளில் சென்றார் .அவருடன் பி.சி. சர்மா, ஜிது பட்வாரி மற்றும் குணால் சவுத்ரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பயணம் மேற்கொண்டனர்.
எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தில் மக்கள் இருக்கும் வேளையில் ஏ.சி கார்களில் அமர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்வதாக வதேரா தெரிவித்துள்ளார். “நீங்கள் (பிரதமர்) ஏசி கார்களில் இருந்து வெளியே வந்து மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.அவ்வாறு பார்த்தால் எரிபொருள் விலையை குறைப்பீர்கள்,” என்றும் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…