பணக்கார கடவுள் என்று அழைக்கப்படும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைவரும் வருடம்தோறும் சென்று அவர்களது வேண்டுதலுக்கு ஏற்ப முடி மற்றும் உண்டியல் காணிக்கையை செலுத்தி வருகிறார்கள். அவ்வப்போது சென்று வரும் போது சிறப்பு வாய்ந்த லண்டு போன்ற பிரசாத வகைகளை வாங்கி வருவார்கள். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு 2 கோடியே 78 லட்சத்து 90 ஆயிரத்து 179 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கடந்தாண்டில் காணிக்கையாக உண்டியல் மூலம் ரூ.1,161 கோடியே 74 லட்சம் கிடைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டில் 12 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 815 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது எனவும், 1 கோடியே 16 லட்சத்து 61 ஆயிரத்து 625 பக்தர்கள் முடி காணிக்கை செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ரூம் வாடகை மூலம் ரூ.83 கோடியே 71 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…