கொரோனா தடுப்பு பணிக்கு பிரதமர் மோடியின் பொது நிவாரண நிதிக்கு ரூ.7.30 கோடி வழங்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளதால் பொருளாதாரத்தில் கடும் சரிவை கண்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு பணிக்காகவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி வழங்குமாறு வலியுறுத்தியது. பிரதமர் மோடியும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நிதியுதவி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதற்கு பல துறையை சார்ந்தவர்கள் அவர்களால் முடிந்த நிதியை அளித்து வருகிறார்கள். அந்தவகையில், தற்போது கொரோனா தடுப்பு பணிக்காக ரிசர்வ் வங்கியின் ஊழியர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் சம்பளத்தை பிரதமர் மோடியின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, ரூ.7.30 கோடி ஊழியர்களிடமிருந்து மொத்த பங்களிப்பு பிரதமர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனை ஏஎன்ஐ அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…