கொரோனா தடுப்பு பணிக்கு பிரதமர் மோடியின் பொது நிவாரண நிதிக்கு ரூ.7.30 கோடி வழங்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளதால் பொருளாதாரத்தில் கடும் சரிவை கண்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு பணிக்காகவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி வழங்குமாறு வலியுறுத்தியது. பிரதமர் மோடியும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நிதியுதவி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதற்கு பல துறையை சார்ந்தவர்கள் அவர்களால் முடிந்த நிதியை அளித்து வருகிறார்கள். அந்தவகையில், தற்போது கொரோனா தடுப்பு பணிக்காக ரிசர்வ் வங்கியின் ஊழியர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் சம்பளத்தை பிரதமர் மோடியின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, ரூ.7.30 கோடி ஊழியர்களிடமிருந்து மொத்த பங்களிப்பு பிரதமர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனை ஏஎன்ஐ அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…