மத்திய பிரதேசம் மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜ்யசபா எம்.பி.,யும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான சுப்பிரமணியசாமி, செய்தியாளர்களை சந்தித்து தனது ரூபாய் மதிப்பு தொடர்பான கருத்தை தெரிவித்தார். அதில், அவர் கூறியதாவது, இந்தோனேஷியா நாட்டின் ரூபாய் நோட்டில் விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளது.
விநாயகர் என்பவர் தடைகளை நீக்குபவர். இந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படம் அச்சிடப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும். இதற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். பிரதமர் மோடி இதற்கு பதில் அளிக்கட்டும் என்றார். மேலும் கூறிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்தில் தவறு ஒன்றும் இல்லை. காங்கிரஸ் கட்சியும், மகாத்மா காந்தியும், குடியுரிமை சட்டத்தை வலியுறுத்தியிருந்தனர். கடந்த 2003ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும் நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தை கோரியிருந்தார். நாங்கள் இப்போது அதை அமல்படுத்தி உள்ளோம். ஆனால் பாக்கிஸ்தான் முஸ்லிம்களுக்கு குடியுரிமை சட்டம் எதிராக உள்ளது எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதனை ஏற்க மறுக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார். இவரது இந்த கருத்து அனைத்து டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…