மோடி பிரதமராக பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவு பெரும் தினத்தை ‘கருப்பு தினமாக’ அனுசரிக்க டெல்லியில் போராடும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கடந்த நவம்பர் மாதத்திலிருந்து தற்போது வரை டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.இதற்காக,டெல்லி எல்லையில் தங்கி 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து,வருகின்ற மே 26 ஆம் தேதியுடன் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கி 6 மாதம் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில்,இதுறித்து ‘சம்யுக்தா கிஷான் மோர்சா’ என்ற விவசாய சங்கத் தலைவர் பல்பீர் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது,”மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும்.மேலும்,நாங்கள் போராட்டத்தை தொடங்கி 6 மாதம் நிறைவடையவுள்ளது.
அதுமட்டுமல்லாமல்,பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று வருகின்ற 26 ஆம் தேதியுடன் 7ஆண்டுகள் நிறைவடையவுள்ளது.எனவே,அன்றைய தினத்தை ‘கருப்பு தினமாக’ அனுசரிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதைப்போல,நாட்டு மக்கள் அனைவரும்,தங்கள் வீடுகள் மற்றும் வானங்களில் மே 26 ஆம் தேதியன்று கருப்பு கொடியை ஏந்தி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்”, என்று கூறினார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…