Electoral Bonds - Supreme court of India [File Image]
Electoral Bonds : கடந்த மாதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கும் நடைமுறையை உச்சநீதிமன்றம் தடை செய்தது. மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கிய விவரங்கள், பல்வேறு நிறுவனங்கள், தனி நபர்கள் ஸ்டேட் பாங்க் மூலம் தேர்தல் பத்திரங்களை வாங்கிய விவரங்கள் ஆகியவற்றை வெளியிட உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி, முதலில் தேர்தல் பத்திர விவரங்களை சீரியல் நம்பர்கள் எதுவும் இன்றி வெளியிட்டது. அதில் சுமார் 6000 கோடி ரூபாய் அளவுக்கு ஆளும் பாஜக அரசு தேர்தல் பத்திரங்களை வாங்கிய விவரமும், பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் அதிக அளவு தேர்தல் பத்திரங்களை வாங்கிய விவரமும் வெளியாகி இருந்தது. இருந்தும், சீரியல் நம்பர்கள் இல்லை என்பதால் யார் யார் எந்த கட்சிக்கு கொடுத்தார்கள் என்ற விவரம் தெரியாமல் இருந்து வருகிறது.
இதனை குறிப்பிட்டு, சீரியல் நம்பர்களுடன் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் மீண்டும் SBIக்கு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, தற்போது சீரியல் நம்பர்களுடன் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் SBI சமர்ப்பித்துள்ளது.
இது தொடர்பாக SBI, உச்சநீதிமன்றத்தில் பிராமண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், SBI இப்போது அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் முழுமையான சீரியல் எண்கள் [KYC விவரங்களைத் தவிர] தெளிவாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. சீரியல் நம்பர்கள் உடன் தேர்தல் பத்திர விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…