கொரோனா தொற்றுநோய் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நேரத்தில் மத்தியப் பிரதேச அரசு மாணவர்களுக்கு ரூ.351 கோடி மதிப்பிலான சீருடைகளை விநியோகித்ததாக அம்மாநில கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுநோயின் போது மாணவர்கள் வீட்டில் படிப்பதாலும், பள்ளிகள் மூடப்பட்டதாலும் சீருடை விநியோகம் குறித்த தகவல்களை காங்கிரஸ் எம்எல்ஏ கேட்டிருந்தார். மேலும், சீருடை வினியோகப் பணிகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ பஞ்சிலால் மேதா கூறினார்.
இதற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2020-21 நிதியாண்டில் 50 மாவட்டங்களில் உள்ள 1.17 கோடி மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடை வழங்கப்பட்டுள்ளது. சுயஉதவி குழுக்கள் இந்த சீருடைகளை தயாரித்துள்ளதாகவும், கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பள்ளி நிர்வாகக் குழு மூலம் அவை விநியோகிக்கப்பட்டதாக கூறினார்.
1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் தொடங்கப்பட்டது என்றும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் “நமது வீடு, நமது பள்ளி” திட்டத்தின் கீழ் ஆன்லைனில் படித்தனர் என்றும் கூறினார்.
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…