உத்தரகண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 1 முதல் பள்ளிகள் திறப்பு..!

Published by
Sharmi

உத்தரகண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அம்மாநில அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை வருடங்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ்  பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இரண்டாம் அலை இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடிய பிறகு தற்போது தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

மேலும், மூன்றாம் அலை பாதிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் காரணத்தால் மத்திய, மாநில அரசுகள் பள்ளிகளை திறப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். மேலும் பல பள்ளி, கல்லூரிகள் தங்களது வகுப்புகளை இணையவழி கல்வியாக மாற்றியுள்ளன.

பல்வேறு மாநிலங்களில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் சில மாநிலங்கள் பள்ளிகள் திறப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அந்த வகையில், தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், பீகார், பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Sharmi

Recent Posts

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

25 minutes ago

முதல்வர் வேட்பாளர் விஜய்.., தவெக செயற்குழு கூட்டத்தின் முக்கியத் தீர்மானங்கள்.!

சென்னை :  2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…

1 hour ago

”திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை” – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

1 hour ago

என்னடா மகனே மூன்று சதத்தை மிஸ் பண்ணிட்ட…கில்லை கிண்டல் செய்த தந்தை!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…

2 hours ago

விஜய் சுற்றுப்பயணத்திற்கு முன் இன்னொரு த.வெ.க மாநில மாநாடு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

3 hours ago

ரிதன்யா தற்கொலை : ஜாமின் மனு மீதான விசாரணை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திருப்பூர் :  மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…

3 hours ago