காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் உள்ள சோபியன் மாவட்டம் கணிகாம் எனும் பகுதியில் நேற்று இரவு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தி உள்ளனர். அப்போது அங்கு 4 பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததை கண்டு பிடித்து உள்ளனர். பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினர் மற்றும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் துப்பாக்கி சண்டை வெடித்துள்ளது.
இருப்பினும், அவர்களிடம் பேச்சுவார்த்தை மூலம் பேசி சரணடைய வைக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் அங்கிருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு பயங்கரவாதி சரணடைந்துள்ளார். உயிரிழந்த பயங்கரவாதிகள் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…