குஜராத்தில் சுற்றுலா தளங்களில் செல்பி எடுக்க தடை – மீறினால் நடவடிக்கை!

Published by
Rebekal

குஜராத்திலுள்ள டாங் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள டாங் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியான சபுடரா பகுதிக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சுற்றுலாவிற்கு வரக்கூடிய பயணிகள் அங்குள்ள இயற்கையை ரசிக்கும் பொழுது அங்குள்ள விலங்குகள் மற்றும் பூங்காக்களுக்கு அருகில் நின்று அதிக அளவில் செல்பி எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு செல்பி எடுப்பது அபாயகரமானதாக இருக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் இனிமேல் சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்க கூடாது என தடை விதித்துள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறுப்பற்ற நிலையில் இருக்கக்கூடிய சில சுற்றுலா பயணிகள் இவ்வாறு செல்பி எடுப்பதன் மூலம் ஆபத்துகள் ஏற்படும் எனவும், எனவே இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காகத்தான் செல்பி எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறி செல்பி எடுக்கக்கூடிய நபர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்துகளை தடுப்பதற்காகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Published by
Rebekal

Recent Posts

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,

இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…

7 hours ago

மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!

சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…

7 hours ago

மேடையில் திடீரென ஒலித்த BEEP சப்தம்.., உரையை முடிக்கச் சொல்லி அலாரமா? – ஜெகதீப் தன்கர் கலகல…,

புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…

8 hours ago

ஐசிசி மகளிர் உலக கோப்பை – அட்டவணை வெளியீடு.!

பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…

9 hours ago

TNPL : பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது பரபரப்பு புகார்.!

மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…

9 hours ago

இஸ்ரேல் தாக்குதல்.., ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு.!

ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…

10 hours ago